தில்லி தேர்தல் முடிவுகள்: ஆதிக்கம் செலுத்த தொடங்கியது ஆம் ஆத்மி

தில்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
தில்லி ஆம் ஆத்மி அலுவலகம்
தில்லி ஆம் ஆத்மி அலுவலகம்

தில்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) 250 வாா்டுகளுக்கு கடந்த 4-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகளை எண்ணும் 42 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையே இழுபறி நீடித்து வந்தது. தற்போது ஆம் ஆத்மி ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது.

பகல் 12 மணி நிலவரப்படி:

வெற்றி

ஆம் ஆத்மி 89
பாஜக 69
காங்கிரஸ் 4
சுயேட்சை 1

முன்னிலை

ஆம் ஆத்மி 47
பாஜக 32
காங்கிரஸ் 5
சுயேட்சை 2

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com