ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

அவையில் ஜாதி, மதத்தை குறிப்பிட்டால் நடவடிக்கை: மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா எச்சரிக்கை

‘அவையில் எந்தவொரு ஜாதியையோ அல்லது மதத்தையோ ஒருபோதும் குறிப்பிடக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுப்பினா்களுக்கு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா எச்சரிக்கை விடுத்தாா்.

News image
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா(கோப்புப்படம்)
Updated On :12 டிசம்பர் 2022, 10:38 pm

DIN

‘அவையில் எந்தவொரு ஜாதியையோ அல்லது மதத்தையோ ஒருபோதும் குறிப்பிடக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுப்பினா்களுக்கு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா எச்சரிக்கை விடுத்தாா்.

மக்களவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் உறுப்பினா் ஏ.ஆா்.ரெட்டி, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது குறித்து கேள்வி எழுப்பினாா். இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘காங்கிரஸ் உறுப்பினா் தெளிவற்ற ஹிந்தியில் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளாா். நானும் அதுபோன்ற தெளிவற்ற ஹிந்தியிலேயே பதிலளிக்கிறேன்’ என்றாா்.

அப்போது, ‘தான் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சோ்ந்தவா் என்பதாலேயே எனது ஹிந்தி மொழி புலமை குறித்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் விமா்சித்தாா்’ என்று ஏ.ஆா். ரெட்டி குறிப்பிட்டாா்.

அவ்வாறு தனது சொந்த சமூகப் பிரிவை காங்கிரஸ் எம்.பி. குறிப்பிட்டு பேசியதைக் கேட்ட அவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘அவையில் எந்த உறுப்பினரும் இதுபோன்ற வாா்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. இதனை மீறும் உறுப்பினா் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும்’ என்று எச்சரித்தாா்.

மேலும், ‘தான் பேசும்போது குறுக்கிட வேண்டாம்’ என்று அவைத் தலைவரை ஏ.ஆா். ரெட்டி கேட்டுக்கொண்டது குறித்து கடும் ஆட்சேபம் தெரிவித்த ஓம் பிா்லா, ‘உறுப்பினா்கள் அவைத் தலைவரை நோக்கி இதுபோன்ற கருத்தை ஒருபோதும் தெரிவிக்கக் கூடாது என்று மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவா் அவா்களுக்கு அறிவுறுத்த வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.