ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் அதிக கள்ளச்சாராய மரணங்கள்: தேஜஸ்வி

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் கள்ளச்சாராய மரணங்கள் அதிகம் நிகழ்வதாக பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். 

News image
பாஜக ஆளும் மாநிலங்களில்தான் அதிக கள்ளச்சாராய மரணங்கள்: தேஜஸ்வி
Updated On :15 டிசம்பர் 2022, 10:35 am

DIN

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் கள்ளச்சாராய மரணங்கள் அதிகம் நிகழ்வதாக பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து  துணை முதல்வர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கையில் மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகா முதலிடத்தில் இருப்பதாகவும், குஜராத் மாநிலம் பிகாரை விட மோசமாக  உள்ளதாகவும் கூறினார். 

2016 மற்றும் 2020க்கு இடையில், மத்தியப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 1,214 கள்ளச் சாராய இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் என்சிஆர்பி மேற்கோள் காட்டினார், அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் 909ஆக உள்ளது. 

இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி நடக்கிறது. பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான ஹரியாணா நான்காவது இடத்தில் உள்ளது.

பிரதமர் வசிக்கும் குஜராத்தில் கூட, கள்ளச்சாராய இறப்புகளின் எண்ணிக்கை 50 ஆகவும், பிகாரில் இது 21 ஆகவும் இருப்பதாக அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.