தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

ஆணும் பெண்ணும் சேர்ந்து அமரக் கூடாது! தடை விதித்த வழிபாட்டுத் தலம்

மதிய உணவு, நொறுக்குத் தீனி என எதுவும் எடுத்துவரக் கூடாது: வரலாற்றுப் புகழ் பெற்ற ஜாமியா மஸ்ஜித் மசூதி அறிவிப்பு

News image

ஜாமியா மஸ்ஜித் மசூதி (கோப்புப் படம்)

Updated On :16 டிசம்பர் 2022, 5:44 pm IST


ஸ்ரீநகர்: வரலாற்றுப் புகழ் பெற்ற ஜாமியா மஸ்ஜித் மசூதியில் ஆணும் பெண்ணும்     சேர்ந்து அமரக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மசூதி வளாகத்தில் புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மத்திய ஜாமியா மஸ்ஜித்தின் அஞ்சுமன் அக்வாஃப் விடுத்துள்ள அறிக்கையில், மசூதி வளாகத்தில் புகைப்படக் கருவிகள் எடுத்து வருவதற்கு அனுமதியில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். 

வளாகத்தில் புகைப்படக் கருவிகளைக் கொண்டு எதையும் புகைப்படம் எடுக்கக்கூடாது. மேலும், வளாகத்திலுள்ள படங்களை புகைப்படம் எடுக்கவும் அனுமதியில்லை. அவ்வாறு கருவிகளைக் கொண்டுவருபவர்கள் வாயிலிலேயே நிறுத்தப்படுவார்கள். 

அதேபோன்று உணவுப் பொருள்களை மசூதி வளாகத்தில் எடுத்துவரவும் தடை விதிக்கப்படுகிறது. மதிய உணவு, நொறுக்குத் தீனி என எதுவும் எடுத்துவரக் கூடாது. 

மசூதியினுள் வரும் பெண்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே வர வேண்டும். ஆண்களுடன் அமரக் கூடாது. 

14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மசூதி நிர்வாகம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை கண்காணிக்க மசூதி பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்துகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.