உ.பி.யில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் பலி
கிரேட்டர் நொய்டா விரைவு சாலையில் 2 பேருந்துகள் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.


கிரேட்டர் நொய்டா விரைவு சாலையில் 2 பேருந்துகள் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் அருகே கிரேட்டர் நொய்டா விரைவு சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். மேலும் பலருக்கு லேசான காயம் ஏற்பட்டள்ளது.
"நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் காவல் நிலையத்திற்கு உள்பட்ட கிரேட்டர் நொய்டா விரைவு சாலையில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டன. இதில் மூன்று பேர் பலியாகினர், பலர் காயமடைந்தனர், 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர் உள்ளனர்" என்று கிரேட்டர் நொய்டா காவல்துறை தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும், விபத்து நடந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...