மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

உ.பி.யில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் பலி

கிரேட்டர் நொய்டா விரைவு சாலையில் 2 பேருந்துகள் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

News image
Updated On :18 டிசம்பர் 2022, 3:31 am

கிரேட்டர் நொய்டா விரைவு சாலையில் 2 பேருந்துகள் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் அருகே கிரேட்டர் நொய்டா விரைவு சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். மேலும் பலருக்கு லேசான  காயம் ஏற்பட்டள்ளது.

"நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் காவல் நிலையத்திற்கு உள்பட்ட கிரேட்டர் நொய்டா விரைவு சாலையில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டன. இதில் மூன்று பேர் பலியாகினர், பலர் காயமடைந்தனர், 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர் உள்ளனர்" என்று கிரேட்டர் நொய்டா காவல்துறை தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும், விபத்து நடந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.