கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தாணே தொழிற்சாலையில் வெடி விபத்து: ஒருவர் பலி, 2 பேர் காயம்! 

மகாராஷ்டிரத்தின், தாணே மாவட்டத்தில் உள்ள தொழிற்துறை பிரிவில் காற்றழுத்தக் கட்டுப்பாட்டு வால்வு சோதனையின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 28 வயது தொழிலாளி உயிரிழந்தார். 

News image
தாணே தொழிற்சாலையில் வெடி விபத்து: ஒருவர் பலி, 2 பேர் காயம்! 
Updated On :21 டிசம்பர் 2022, 6:47 am

DIN

மகாராஷ்டிரத்தின், தாணே மாவட்டத்தில் உள்ள தொழிற்துறை பிரிவில் காற்றழுத்தக் கட்டுப்பாட்டு வால்வு சோதனையின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 28 வயது தொழிலாளி உயிரிழந்தார். 

அம்பர்நாத் டவுன்ஷிப்பில் அமைந்துள்ள தொழிற்சாலை வால்வுகள் தயாரிக்கப்படும் பிரிவில் செவ்வாய் இரவு இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

வெடிவிபத்தில் உயிரிழந்தவர் ஸ்ரீகாந்த் கதம் என அடையாளம் காணப்பட்டார். காற்றழுத்தக் கட்டுப்பாட்டு வால்வில் காற்றை நிரப்பி சோதனை செய்தபோது வெடித்து சிதறியது என சிவாஜி நகர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இந்த வெடிவிபத்தில் மேலும் 2 தொழிலாளர்கள் காயமடைந்து உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.