நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

5 நாடுகளில் இருந்து வருவோருக்கு கரோனா பரிசோதனை கட்டாயம்!

சீனாவிலிருந்து வருவோருக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

News image

சீனாவிலிருந்து வருவோருக்கு கரோனா பரிசோதனை கட்டாயம்!

Updated On :24 டிசம்பர் 2022, 7:55 am

DIN

சீனாவிலிருந்து வருவோருக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

சீனா, ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய ஐந்து நாடுகளில் இருந்து வருவோருக்கும் கரோனா பரிசோதனை கட்டாயம் நடத்தப்படும். 

புதிய வகை கரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுக்கும் விதமாக மத்திய சுகாதாரத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 

சீனா உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வருவோருக்கு கரோனா அறிகுறி அல்லது கரோனா உறுதியாகும்பட்சத்தில் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெளிநாட்டுப் பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு ரேண்டமாக பரிசோதனை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வெளிநாடுகளில் கரோனா பரவல் அதிகரிக்கும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

வெளிநாட்டு பயணிகள் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சீனாவில் புதிய கரோனா அலை எழுந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ள நிலையில், பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.