/

மியான்மர் சுற்றுலாப் பயணிகளுக்கு கரோனா இல்லை: மருத்துவமனை தகவல்!

மியான்மாரைச் சேர்ந்த 11 சுற்றுலாப் பயணிகளுக்கு கரோனா தொற்று இல்லை என்று சப்தர்ஜங் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

News image
Updated On :28 டிசம்பர் 2022, 10:24 am

மியான்மாரைச் சேர்ந்த 11 சுற்றுலாப் பயணிகளுக்கு கரோனா தொற்று இல்லை என்று சப்தர்ஜங் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மியான்மரில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை 11 சுற்றுலாப் பயணிகள் குழு தில்லிக்கு வந்தனர். அவர்களை ஐஜிஐ விமான நிலையத்தில் கரோனா சோதனை செய்ததில், அதில் ஒருவருக்கு கரோனா இருப்பது உறுதியானதையடுத்து, 11 பேரும் சப்தர்ஜங் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர். 

11 பேரின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டதில், அதில் கரோனா தொற்று இல்லை என்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து. பதினொரு பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்று மூத்த மருத்துவர் ஒருவர் கூறினார். 

சீனா உள்பட சில நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு சர்வதேச விமானத்திலும் வரும் 2 சதவீத பயணிகளுக்கு கரோனா பரிசோதனையை அரசு கட்டாயமாக்கியுள்ளது. 

மேலும், தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கான ஒத்திகை நேற்று நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.