ரயில்வே துறையை நவீனப்படுத்த மத்திய அரசு மாபெரும் முதலீடு: பிரதமர் மோடி

ரயில்வே துறையை நவீனப்படுத்துவதற்கு மத்திய அரசு மாபெரும் முதலீட்டினை மேற்கொண்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ரயில்வே துறையை நவீனப்படுத்த மத்திய அரசு மாபெரும் முதலீடு: பிரதமர் மோடி

ரயில்வே துறையை நவீனப்படுத்துவதற்கு மத்திய அரசு மாபெரும் முதலீட்டினை மேற்கொண்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மேற்குவங்கத்தில் வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

மேற்குவங்கத்தில் ஹௌராவிலிருந்து நியூ ஜல்பாய்குரிக்கு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். திட்டத்தினை தொடங்கி வைத்த பிரதமர் மோடி நியூ ஜல்பாய்குரி ரயில்வே மறு சீரமைப்புத் திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டினார். நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள ரயில்வே நிலைய வழித்தடங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பயனளிக்கக் கூடியவை என தெரிவித்தார்.

வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: வந்தே மாதரம் முழக்கம் உருவான இடத்திலிருந்து வந்தே பாரத் ரயில் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை டிசம்பர் 30-ஆம் தேதியில் தொடங்கப்படுவதில் முக்கியத்துவம் உள்ளது. இதே நாளில் 1943-ஆம் ஆண்டு நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அந்தமான் மற்றும் நிகோபார் தீவில் மூவர்ணக் கொடியை ஏற்றினார். 21-ஆம் நூற்றாண்டில் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ரயில்வே துறையின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்தப் பணிகள் மிகவும் முக்கியம். ரயில்வே துறையை மேம்படுத்த நாடு முழுவதும் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மக்களின் தடையற்ற மற்றும் வேகமான பயணத்துக்காக நாடு முழுவதும் புதிய விமான நிலையங்கள், நீர் வழித்தடங்கள், துறைமுகங்கள் மற்றும் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com