தாயாரின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

குஜராத் காந்தி நகரில் உள்ள இல்லத்தில் தாயார் ஹீராபென் மோடியின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 
தாயாரின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி
Published on
Updated on
1 min read

குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள இல்லத்தில் தாயார் ஹீராபென் மோடியின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(டிச.30) காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 100. 

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தாயார் மறைவையடுத்து ஆமதாபாத் வந்த பிரதமர் மோடி, காந்தி நகரில் உள்ள இல்லத்தில் தாயாரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

இதையடுத்து ஹீராபென் மோடியின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. இன்றைய தினமே இறுதிச்சடங்கும் நடைபெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com