மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் நேற்று தொடங்கிய நிலையில், 2022 - 2023ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்யவுள்ளார்.
அதற்கு முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பட்ஜெட் 2022க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.