புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

தமிழ்நாடு

புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

புதுவை சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான செய்திகள் தினமணி இணையத்தில் நேரலையில்...

புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி - DIN

Updated On :9 ஏப்ரல் 2026, 2:44 am
2:44 am, 9 ஏப்ரல் 2026

தனித்துவமான வாக்குச்சாவடி 

புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள வாக்குச் சாவடி, பாரம்பரியத்தையும் வரலாற்றையும் நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. வருவோர் அனைவருக்கும் இருக்கை. டோக்கன் முறையில் அழைப்பு. முதலில் 50 டோக்கன். வாக்கு செலுத்த வந்தோருக்கு பூக்கள் கொடுத்து வரவேற்பு...

டோக்கன் கொடுத்து அமர வைக்கப்பட்டிருக்கும் வாக்காளர்கள்

டோக்கன் கொடுத்து அமர வைக்கப்பட்டிருக்கும் வாக்காளர்கள் - DIN

2:17 am, 9 ஏப்ரல் 2026

புதுவை பெண்களுக்கு மோடி வேண்டுகோள்

பிரதமர் மோடியின் எக்ஸ் தளப் பதிவு: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்கள் தொடங்கும் வேளையில், வாக்காளர்கள் அனைவரும் பெருமளவில், முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் திரண்டு வந்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பாக, நமது இளைஞர்களும் பெண் வாக்காளர்களும் ஜனநாயகச் செயல்முறையை வலுப்படுத்த முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். புதுச்சேரியின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது எனப் பதிவிட்டுள்ளார்.

1:56 am, 9 ஏப்ரல் 2026

பெண்களே நிர்வகிக்கும் வாக்குச்சாவடிகள்

புதுச்சேரியில் பெண்களே நிர்வகிக்கும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதிக்கு ஒன்று என அமைக்கப்பட்டுள்ள, 30 மகளிர் வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

1:51 am, 9 ஏப்ரல் 2026

காத்திருந்து வாக்களிக்கும் மக்கள்

புதுச்சேரி வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். கோடை வெய்யிலைத் தவிர்க்கும் வகையில் காலை முதலே மக்கள் வரிசையில் காத்திருந்து ஜனநாயகக் கடமையாற்றி வருகின்றனர். வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு குடிநீர், கழிப்பறை, ஓய்வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

1:49 am, 9 ஏப்ரல் 2026

ராஜ்பவன் தொகுதியில் பசுமை வாக்குச்சாவடி

ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட வ.உ.சி. பள்ளியில் பசுமை வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஓலைகள், தோரணங்கள், இலைகள் கொண்டு வாக்குச்சாவடி அலங்கரிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை குறைந்த எண்ணிக்கையில் வாக்குகள் பதிவான நிலையில், இம்முறை வாக்குகளை அதிகரிக்கும் நோக்கத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1:42 am, 9 ஏப்ரல் 2026

30 தொகுதிகளில் வாக்குப் பதிவு

யூனியன் பிரதேசத்தின் 30 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. என். ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக களம் காண்பதால் இங்கு கடும் போட்டி நிலவுகிறது. சுமார் 9.50 லட்சம் வாக்காளர்கள் இன்று வாக்களிக்கின்றனர்.

1:29 am, 9 ஏப்ரல் 2026

புதுவையில் இன்று வாக்குப் பதிவு

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. மொத்தம் 294 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 9.50 லட்சம் வாக்காளர்கள் (ஆண்கள் 4,46,667, பெண்கள் 5,03,832, மூன்றாம் பாலினத்தவர் 140) வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.