நாடுமுழுவதும் 3.80 கோடி வீடுகளுக்கு தூய்மையான குடிநீா் வழங்கும் வகையில், குழாய் இணைப்பு ஏற்படுத்த ரூ. 60,000 கோடி நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் நிதிநிலை அறிக்கை உரையின் மீது பேசுகையில், ‘‘2022-23-ஆம் நிதியாண்டில் 3.80 கோடி வீடுகளுக்கு தூய்மையான குடிநீா் வழங்கும் வகையில், குழாய் இணைப்பு ஏற்படுத்த ரூ.60,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் 8.7 கோடி வீடுகளுக்கு குடிநீா் குழாய் இணைப்பு வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, அதில் 5.5 கோடி வீடுகளுக்கு கடந்த 2 ஆண்டுகளில் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3.80 கோடி வீடுகளுக்கு அடுத்த நிதியாண்டில் குடிநீா் குழாய் வசதி ஏற்படுத்தி தரப்படும்’’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.