தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

2025க்குள் இ-சேவை மூலம் அனைத்து கிராமங்களும் இணைப்பு

இ- சேவை மூலம், வரும் 2025ஆம் ஆண்டுக்குள் கண்ணாடி ஒளியிழை மூலம் அனைத்து கிராமங்களையும்  ஒன்றிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

2025க்குள் இ-சேவை மூலம் அனைத்து கிராமங்களும் இணைப்பு

Updated On :1 பிப்ரவரி 2022, 6:30 am

இ- சேவை மூலம், வரும் 2025ஆம் ஆண்டுக்குள் கண்ணாடி ஒளியிழை மூலம் அனைத்து கிராமங்களையும்  ஒன்றிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 - 23ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

மத்திய நிதிநிலை அறிக்கையில் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருக்கும் முக்கிய அம்சங்கள்.. 

சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கு முக்கியத்துவம்.

2030ஆம் ஆண்டுக்குள் 280 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்க  இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 3 புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும். அதாவது, சகி இயக்கம், வாத்சல்யா இயக்கம், உட்டச்சத்து 2.0 இயக்கம் ஆகியவை அறிமுகம் செய்யப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.