புது தில்லி: கடந்த ஜனவரி மாதம் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வரி வசூல் 1,40, 986 கோடி ரூபாய் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
2022 - 23ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மத்திய நிதிநிலை அறிக்கையில் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருக்கும் முக்கிய அம்சங்கள்..
நாட்டில் கடந்த ஜனவரி மாதத்தில் அதிகபட்ச வரி வசூல் செய்யப்பட்டிருப்பதாகவும், ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, கடந்த ஜனவரி மாதத்தில் அதிகபட்ச வரி வசூல் செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரு நிறுவனங்ளுக்கான கூடுதல் வரி 12% இருந்து 7 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.