குழாய் நீர் இணைப்புக்கு ரூ.60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு

குழாய் நீர் இணைப்புகளை வழங்க ரூ.60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 
குழாய் நீர் இணைப்புக்கு ரூ.60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
Published on
Updated on
1 min read

குழாய் நீர் இணைப்புகளை வழங்க ரூ.60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

2022 - 23ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். 

அப்போது உரையாற்றிய அவர், 

2022-23ஆம் ஆண்டில் 3.8 கோடி குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்புகளை வழங்க ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளுக்கு மார்ச் 31, 2023 வரை அதாவது ஓராண்டு நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. 

அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய முறை(என்பிஎஸ்) பங்களிப்பில் வரிவிலக்கு 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக அதிகரிக்க உள்ளது என்றும் நிதியமைச்சர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com