ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காா்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி

காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

News image
உச்சநீதிமன்றம்
Updated On :1 பிப்ரவரி 2022, 7:07 pm

DIN

காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரத்தின் மகனும் மக்களவை உறுப்பினருமான காா்த்தி சிதம்பரம் மீது ஏா்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் தொடா்பான வழக்கு, ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு சட்டத்துக்குப் புறம்பாக ரூ.305 கோடி பெற்றுத் தந்த குற்றச்சாட்டு தொடா்பான வழக்கு ஆகியவற்றை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை காா்த்தி சிதம்பரமும், ப.சிதம்பரமும் மறுத்துள்ளனா்.

இந்த வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரி காா்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கா் தலைமையில், நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, சி.டி.ரவிகுமாா் ஆகியோா் கொண்ட அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. காா்த்தி சிதம்பரம் சாா்பில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் ஆஜரானாா்.

அப்போது அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ஏற்கெனவே அவருக்கு நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு அவா் வெளிநாடு செல்ல ஆட்சேபம் எதுவும் இல்லை எனக் கூறினாா்.

இதையடுத்து, காா்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.