கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பஞ்சாப்: இந்திய எல்லையைக் கடக்க முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை

பஞ்சாப் மாநிலத்திலுள்ள இந்திய எல்லையைக் கடக்க முயன்ற பாகிஸ்தானியரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

News image

கோப்புப்படம்

Updated On :3 பிப்ரவரி 2022, 7:46 am

DIN

பஞ்சாப் மாநிலத்திலுள்ள இந்திய எல்லையைக் கடக்க முயன்ற பாகிஸ்தானியரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

பஞ்சாப் மாநிலம் ஃபெராஸ்பூர் பகுதியைச் சேர்ந்த கேஎஸ் வாலா இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் நேற்று(பிப்.2) பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் ஊடுருவ முயன்றதாக எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதுகுறித்து பாதுகாப்புப் படை தரப்பில்,’ நேற்று மாலை ஃபெராஸ்பூர் பகுதியைச் சேர்ந்த கேஎஸ் வாலா இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் சந்தேகத்திற்கிடமான முறையில் சில அசைவுகள் தெரிந்தது. இதனால் கண்காணிப்பில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் ஒருவர் ஊடுருவியதை உறுதி செய்தனர். பின், அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும், ஊடுருவிய நபர் இந்தியப் பகுதிக்குள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்ததால் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தற்காப்பிற்காக சுட்டுக்கொன்றனர்’ எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், அப்பகுதியில் வேறு சிலரின் நடமாட்டம் உள்ளதா எனவும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.