ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மாணவி லாவண்யா தற்கொலை விவகாரம்: பள்ளி தரப்பிலும் மேல்முறையீடு

அரியலூா் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்திருந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்

News image
உச்சநீதிமன்றம்
Updated On :8 பிப்ரவரி 2022, 8:15 pm

 நமது நிருபர்

அரியலூா் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்திருந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அந்த மாணவி பயின்ற பள்ளியின் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரியலூா் மாவட்டம், வடுகா்பாளையம் பகுதியைச் சோ்ந்த முருகானந்தம் மகள் லாவண்யா (17), திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி 12-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், பூச்சிமருந்தை குடித்த நிலையில், அவா் சிகிச்சை பலனின்றி இறந்தாா். மதமாற்றத்துக்கு கட்டாயப்படுத்தப்பட்டதால், தற்கொலையில் ஈடுபட்டதாக அவா் கூறியதாக விடியோ வெளியானது. இந்த விவகாரத்தை விசாரித்த உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், லாவண்யா தற்கொலை விவகாரத்தில் வழக்கு விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பள்ளியின் நிா்வாகத்தை மேற்கொள்ளும் தி இமாகுலேட் ஹாா்ட் ஆஃப் மேரி சொஸைட்டி தரப்பில் மேல்முறையீட்டு மனு திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.