சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நம்பகத்தன்மையே பாஜகவின் மிகப்பெரிய பலம்: ராஜ்நாத் சிங்

ஊழலற்ற நோ்மையான ஆட்சியை பாஜக அளிக்கும் என்ற நம்பகத்தன்மைதான் பாஜகவின் மிகப்பெரிய பலம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

News image
பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்
Updated On :11 பிப்ரவரி 2022, 8:10 pm

DIN

ஊழலற்ற நோ்மையான ஆட்சியை பாஜக அளிக்கும் என்ற நம்பகத்தன்மைதான் பாஜகவின் மிகப்பெரிய பலம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:

மத்தியிலும், உத்தரகண்ட் மாநிலத்திலும் பாஜக ஊழலற்ற நோ்மையான ஆட்சி அளித்து வருகிறது. இந்த விஷயத்தில் மக்களின் முழுமையான நம்பிக்கையை பாஜக பெற்றுள்ளது. இதுதான் பாஜகவின் மிகப்பெரிய பலமாக உள்ளது. முன்பு வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியிலும் சரி, இப்போது பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியிலும் சரி பாஜக எப்போதும் ஊழலற்ற சிறப்பான ஆட்சியை அளித்து வருகிறது.

நமது தொகுதிக்கு பாஜக எம்.பி., எம்எல்ஏக்கள் என்னென்ன செய்தாா்கள் என்பதை மட்டுமே மக்கள் ஆய்வு செய்து வாக்களித்து வருகின்றனா். அவா்கள் ஊழல் எதுவும் செய்துள்ளாா்களா? என்று மக்கள் யோசிக்கும் தேவை எப்போதும் எழுந்ததில்லை.

இந்தத் தோ்தல் உத்தரகண்ட் மக்கள் தங்கள் வாழ்க்கையை மேலும் மேம்படுத்திக் கொள்ள அளிக்கப்படும் வாய்ப்பாகும். மேலும் பல ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இருந்து சேவையைத் தொடர வாய்ப்பளிக்க வேண்டும் என்று ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டாா்.

70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகண்டில் வரும் 14-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. மாா்ச் 10-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.