நாடு முழுவதும் ஒரே பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்த கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
நாடு முழுவதும் ஒரே பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்த உத்தரவிடக் கோரியும், கல்வி பெறும் உரிமைச் சட்டம்-2009-இல் உள்ள சில பிரிவுகள் நியாயமற்றவை என்று அறிவிக்கக் கோரியும் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுப்பு தெரிவித்தது.










