மத்திய பிரதேச முதல்வருக்குமீண்டும் கரோனா பாதிப்பு
மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் சௌஹானுக்கு மீண்டும் கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவா் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாா்.


மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் சௌஹானுக்கு மீண்டும் கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவா் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாா்.
இது தொடா்பாக சௌஹான் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘லேசான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தொற்று உறுதியானதையடுத்து மருத்துவா்களின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்தலில் உள்ளேன். எனது அலுவலகப் பணிகளை இணையவழியில் மேற்கொள்ள இருக்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.
இதற்கு முன்பு கடந்த 2020-ஆம் ஆண்டு கரோனா முதல் அலையின்போதும் சௌஹானுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அப்போது, அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா்.
மத்திய பிரதேசத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்ததையடுத்து, கடந்த வாரம்தான் பல்வேறு கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...