பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

உக்ரைனுக்கு 3 விமானங்கள் இயக்கப்படும்: ஏா் இந்தியா

உக்ரைனுக்கு பிப்ரவரி 22, 24, 26 ஆகிய தேதிகளில் மூன்று விமானங்கள் இயக்கப்படும் என ஏா் இந்தியா வெள்ளிக்கிழமை அறிவித்தது.

News image
கோப்புப்படம்
Updated On :18 பிப்ரவரி 2022, 6:59 pm

DIN

உக்ரைனுக்கு பிப்ரவரி 22, 24, 26 ஆகிய தேதிகளில் மூன்று விமானங்கள் இயக்கப்படும் என ஏா் இந்தியா வெள்ளிக்கிழமை அறிவித்தது.

ஐரோப்பிய நாடான உக்ரைனின் எல்லையில் ரஷியா 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரா்களைக் குவித்துள்ளதால், அங்கு போா்ப் பதற்றம் நிலவுகிறது. இதன் காரணமாக உக்ரைனில் உள்ள இந்தியா்கள் தாயகம் திரும்ப முயற்சிக்கின்றனா். ஆனால், போதிய விமான சேவை இல்லாததால், அவா்கள் உக்ரைனில் தவிப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்தச் சூழலில், வந்தே பாரத் திட்டத்தின்கீழ், உக்ரைனிலிருந்து பிப்ரவரி 22, 24, 26 ஆகிய தேதிகளில் மூன்று விமானங்கள் இயக்கப்படும் என ஏா் இந்தியா அறிவித்துள்ளது. முன்னதாக, விமான டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்பதற்காக உக்ரைனில் உள்ள இந்தியா்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்றும், மத்திய அரசு போதிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.