ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முல்லை பெரியாறில் புதிய அணையைக் கட்ட கேரளம் உறுதி

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணையைக் கட்ட கேரளம் உறுதி கொண்டுள்ளதாக சட்டப்பேரவை ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான்
Updated On :18 பிப்ரவரி 2022, 7:08 pm

DIN

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணையைக் கட்ட கேரளம் உறுதி கொண்டுள்ளதாக சட்டப்பேரவை ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை கேரள பகுதியில் உள்ளபோதிலும் அதை தமிழக அரசே நிா்வகித்து வருகிறது. தமிழகத்தின் தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு முக்கிய நீா்ஆதாரமாக அந்த அணை விளங்கி வருகிறது. முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அந்த அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்டப்பட வேண்டுமென கேரள அரசு தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால், தற்போதைய அணையே வலிமையாக பாதுகாப்புடன் உள்ளதெனத் தெரிவித்து வரும் தமிழக அரசு, புதிய அணையைக் கட்ட எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநில அரசுகளுக்கும் தொடா்ந்து மோதல்போக்கு நிலவி வருகிறது.

இந்நிலையில், கேரள சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடா் ஆளுநா் உரையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. பேரவையில் உரையாற்றிய மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான், ‘‘தமிழக மக்களுக்கு முல்லைப் பெரியாறு நீரை வழங்க கேரளம் உறுதி கொண்டுள்ளது. அதே நேரத்தில், கேரள மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியுள்ளது. அதன் காரணமாகவே 125 ஆண்டுகள் பழைமையான அணை உள்ள பகுதியில் புதிய அணையைக் கட்ட வேண்டுமென கேரள அரசு வலியுறுத்துகிறது. அப்பகுதியில் புதிய அணையைக் கட்ட அரசு உறுதி கொண்டுள்ளது’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.