47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை

ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்த ஆலோசனை கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுதில்லியில் இன்று நடத்தினார். 

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 4:52 pm

DIN

ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்த ஆலோசனை கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுதில்லியில் இன்று நடத்தினார். 

கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளநர் மனோஜ் சின்ஹா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் ராணுவ அதிகாரிகள் உட்பட மத்திய அரசு மற்றும் ஜம்மு காஷ்மீர் அரசின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாத சம்பவங்கள் குறைந்துள்ளன. 

இதற்காக பாதுகாப்பு அமைப்புகள் மேற்கொண்ட முயற்சிகளை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டினார்.

கடந்த 2018-ம் ஆண்டில் 417 ஆக இருந்த பயங்கரவாத சம்பவங்களின் எண்ணிக்கை 2021-ம் ஆண்டு 229 ஆக குறைந்தது. கடந்த 2018ம் ஆண்டில் உயிர் தியாகம் செய்த பாதுகாப்புப் படை வீரர்களின் எண்ணிக்கை 91 ஆக இருந்தது. கடந்த 2021-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 42 குறைந்தது. 

பயங்கரவாத ஊடுருவல் முற்றிலும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யவும், பயங்கரவாதத்தை ஒழிக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.