நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து கோரி குடியரசுத் தலைவருக்கு 4,000 அஞ்சல் அட்டைகள் அனுப்பிவைப்பு

மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு 4,000 அஞ்சல் அட்டைகள் இன்று அனுப்பிவைக்கப்பட்டன. 

News image
Updated On :20 பிப்ரவரி 2022, 4:35 pm

DIN

மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு 4,000 அஞ்சல் அட்டைகள் இன்று அனுப்பிவைக்கப்பட்டன. 
பிப்ரவரி 27ஆம் தேதி மராத்தி மொழி தினம் கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்பாக மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து அளிக்கக் கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு 4,000 அஞ்சல் அட்டைகள் இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. 

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் இந்த அட்டைகள் அனுப்பிவைக்கப்பட்டதாக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஷ்டிரபதி பவனுக்கு ஏற்கெனவே இதே கோரிக்கையை வலியுறுத்தி அஞ்சல் அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன. 
தற்போது இது இரண்டாவது தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.