
மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு 4,000 அஞ்சல் அட்டைகள் இன்று அனுப்பிவைக்கப்பட்டன.
பிப்ரவரி 27ஆம் தேதி மராத்தி மொழி தினம் கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்பாக மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து அளிக்கக் கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு 4,000 அஞ்சல் அட்டைகள் இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க- மாற்றுத்திறனாளிக்கு செயற்கைக் கால் அணிய உதவிய மத்திய அமைச்சர்
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் இந்த அட்டைகள் அனுப்பிவைக்கப்பட்டதாக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஷ்டிரபதி பவனுக்கு ஏற்கெனவே இதே கோரிக்கையை வலியுறுத்தி அஞ்சல் அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன.
தற்போது இது இரண்டாவது தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.