தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மோசமான உடல்நிலையில் லாலு பிரசாத் யாதவ்: மருத்துவமனை

பிகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

News image
லாலு பிரசாத் யாதவ்
Updated On :22 பிப்ரவரி 2022, 7:18 am

DIN

பிகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிகாரில் கால்நடைத் தீவன ஊழல் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட 5-ஆவது வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாதுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையை  சிபிஐ உயர்நீதிமன்றம் நேற்று(பிப்.21) விதித்தது.

முன்னதாக , ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் லாலுவின் ரத்த அளவு காலை 70 ஆக இருக்கிறது.  மாலை 240 ஆக உயர்ந்து விடுகிறது. ரத்த அழுத்தமும் 130 முதல் 160 வரை ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. மேலும்,  சிறுநீரகம் வெறும் 20 சதவீத திறனுடன் இயங்கி வருவதால் அவரது உடல்நிலை மோசமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

5 ஆண்டுகள் சிறைத் தண்டனையால் கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் ஒட்டுமொத்தமாக அவருக்கான சிறைத் தண்டனை 19 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.