பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

உக்ரைனிலுள்ள இந்தியர்களை மீட்க கிளம்பியது முதல் விமானம்!

உக்ரைனில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் இந்தியர்களை மீட்பதற்காக முதல் விமானம் உக்ரைனுக்கு புறப்பட்டுச் சென்றது.

News image
ஏர் இந்தியா
Updated On :22 பிப்ரவரி 2022, 5:06 am

DIN

உக்ரைனில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் இந்தியர்களை மீட்பதற்காக முதல் விமானம் உக்ரைனுக்கு புறப்பட்டுச் சென்றது.

ஐரோப்பிய நாடான உக்ரைனின் எல்லையில் ரஷியா 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரா்களைக் குவித்துள்ளதால், அங்கு போா்ப் பதற்றம் நிலவுகிறது. இதன் காரணமாக உக்ரைனில் உள்ள இந்தியா்கள் தாயகம் திரும்ப முயற்சிக்கின்றனா். ஆனால், போதிய விமான சேவை இல்லாததால், அவா்கள் உக்ரைனில் தவிப்பதாக செய்திகள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து ஏர் இந்தியா சார்பில் மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்பதற்காக மூன்று விமானங்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்களை மீட்கும் முதல் ஏர் இந்தியாவின் விமானம் இன்று காலை உக்ரைன் நாட்டிற்கு கிளம்பிச் சென்றது. 200 இருக்கைகளை கொண்ட இந்த விமானம் இன்று நள்ளிரவில் தில்லி வந்தடையவுள்ளது.

தொடர்ந்து, பிப்ரவரி 24 மற்றும் 26 ஆம் தேதிகளில் அடுத்தடுத்த விமானங்களை ஏர் இந்தியா நிர்வாகம் இயக்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.