அதுபோல, கடந்த ஆண்டு டிசம்பா் 1-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘நுகா்வோா் குறைதீா் ஆணைய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு சாா்பில் ஒதுக்கப்படும் நிதி, உரிய திட்டமிடல் இல்லாததால் வீணாகும் சூழல் உள்ளது. எனவே, ஒதுக்கப்படும் மத்திய நிதியை அந்தக் காலத்துக்குள் பயன்படுத்துவதை எளிதாக்கவும், நிதிப் பயன்பாட்டுச் சான்றிதழ் சமா்ப்பிக்கப்படுவதை உறுதி செய்யவும், நிதியின் எந்தப் பகுதியும் குறையாமல் இருக்க அதிகாரமளிக்கப்பட்ட குழுக்களுக்கு உதவி செய்யவும் ஒருங்கிணைப்பு அதிகாரி ஒருவரை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஒரு வாரத்துக்குள்ளாக நியமிக்க வேண்டும்.