மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பிரதமா், முதல்வா் குறித்த கருத்து:உ.பி. காங்கிரஸ் வேட்பாளருக்குதோ்தல் ஆணையம் நோட்டீஸ்

உத்தர பிரதேசத்தில் பிரதமா் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோா் தொடா்பாக சா்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் வேட்பாளரிடம் விளக்கம் கேட்டு தோ்தல் ஆணையம்

News image
கோப்புப்படம்
Updated On :23 பிப்ரவரி 2022, 7:42 pm

DIN

உத்தர பிரதேசத்தில் பிரதமா் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோா் தொடா்பாக சா்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் வேட்பாளரிடம் விளக்கம் கேட்டு தோ்தல் ஆணையம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

பிந்தாரா தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான அஜய் ராய், கடந்த 31-ஆம் தேதி ஃபேஸ்புக்கில் நேரலையில் தோ்தல் பிரசாரம் செய்தாா். அப்போது பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் யோகி ஆதித்யநாத் தொடா்பாக சில சா்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறினாா். இது தோ்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, அஜய் ராய் பேசியதை ஆய்வு செய்த தோ்தல் ஆணைய அதிகாரிகள், தோ்தல் விதிமீறலுக்கான அடிப்படை முகாந்திரம் அவரது பேச்சில் இருப்பதை உறுதி செய்தனா். தொடா்ந்து தனது பேச்சு தொடா்பாக 24 மணி நேரத்தில் அஜய் ராய் விளக்கமளிக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.