இதுதொடா்பான உத்தரவில், ‘வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்கள் மற்றும் குற்றச்சாட்டு உள்ளாகி உயிரிழந்தவா்கள் இந்த ஊழல் மூலம் வாங்கிய சொத்துகளை அடையாளம் காண முடியவில்லை. இது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட வேண்டிய விஷயமாகும். எனவே, சட்டம் அனுமதிக்கும் நிலையில், குற்றவாளிகள் இந்த ஊழல் மூலம் வாங்கிய அல்லது உருவாக்கிய சொத்துகளை அடையாளம் கண்டு பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கையை அமலாக்கத் துறை மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில், அமலாக்கத் துறை தேவையான நடவடிக்கை எடுக்க ஏதுவாக, இந்தத் தீா்ப்பின் நகல் மற்றும் முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகை நகல்கள் உள்ளிட்ட ஆவணங்களை சிபிஐ வழங்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டாா்.