திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

'தேர்தலில் பாஜக முந்தைய சாதனைகளை முறியடிக்கும்' - உ.பி. துணை முதல்வர்

உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வர் தினேஷ் ஷர்மா லக்னெள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். 

News image
லக்னெளவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்கினை செலுத்திய துணை முதல்வர் தினேஷ் சர்மா 
Updated On :23 பிப்ரவரி 2022, 6:22 am

DIN

உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வர் தினேஷ் ஷர்மா லக்னெள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். 

403 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் இதுவரை 3 கட்டத் தோ்தல்கள் நிறைவடைந்துள்ளன. 4-ஆவது கட்டமாக 9 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி  நடைபெற்று வருகின்றது.

காங்கிரஸின் கோட்டையாக அறியப்படும் ரே பரேலி தொகுதி, லக்கிம்பூர் கேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. 59 தொகுதிகளில் உள்ள 24,643 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 624 வேட்பாளா்கள் போட்டியிடும் இத்தொகுதிகளில் 2.13 கோடி வாக்காளர்கள் வாக்கு செலுத்துகின்றனர். 

இன்று நடைபெறும் வாக்குப்பதிவில் சில முக்கிய அரசியல் தலைவர்கள் தங்கள் வாக்குகளை செலுத்துகின்றனர். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வர் தினேஷ் ஷர்மா லக்னெள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ' 4-வது கட்ட தேர்தலுக்குப் பிறகு, பாஜக இரட்டை சதம் அடிக்கும், அதன் முந்தைய சாதனைகளை முறியடிக்கும் வகையில் முன்னேறும். பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் செய்த வளர்ச்சிப் பணிகள் அனைவரின் வீட்டையும் சென்றடைந்துள்ளன' என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.