‘உ.பி.யில் 300 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்’: ராஜ்நாத் சிங்

உத்தரப் பிரதேசத்தில் 300 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
உ.பி.யில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாக்களித்தார்
உ.பி.யில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாக்களித்தார்

உத்தரப் பிரதேசத்தில் 300 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 59 தொகுதிகளில் இன்று நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றன. மிக முக்கியமான தொகுதிகளை உள்ளடக்கிய நான்காம் கட்ட வாக்குப் பதிவின் பல்வேறு தலைவர்கள் வாக்குகளித்து வருகின்றனர்.

இந்நிலையில், லக்னெள மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது வாக்களித்தார்.

பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாங்கள் 300 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும் 2017ஆம் ஆண்டு வெற்றி பெறுவோம் என கூறினார்கள், ஆனால் நாங்கள்தான் ஆட்சி அமைத்தோம். இம்முறையும் அதே தான் திரும்ப நடைபெறவுள்ளது.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com