புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ருமேனியாவிலிருந்து 219 இந்தியர்களுடன் புறப்பட்டது ஏர் இந்தியா விமானம்

ஏர் இந்தியா விமானம், 219 இந்தியர்களுடன் ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட்டிலிருந்து புறப்பட்டுவிட்டதாக இந்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

News image
219 இந்தியர்களுடன் புறப்பட்டது ஏர் இந்தியா விமானம்
Updated On :26 பிப்ரவரி 2022, 1:02 pm

PTI

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கச் சென்ற ஏர் இந்தியா விமானம், 219 இந்தியர்களுடன் ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட்டிலிருந்து புறப்பட்டுவிட்டதாக இந்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையின் ஒருகட்டமாக, மும்பைக்கு ருமேனியாவிலிருந்து முதல் விமானம் இன்று இரவு 8 மணிக்கு வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியா - உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அங்குள்ள இந்தியர்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக இந்தியாவிலிருந்து இன்று காலை 3.40 மணியளவில் ருமேனியாவிற்கு ஏர் இந்தியா விமானம் கிளம்பியது.

அங்கு சாலை மார்க்கமாக உக்ரைன்-ருமேனியா எல்லையை வந்தடைந்த இந்தியர்கள், அரசு அதிகாரிகள் மூலம் புகாரெஸ்ட் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் அவர்கள் இந்தியாவுக்கு திரும்ப அழைத்து வரப்படுகிறார்கள்.

இந்தியாவிலிருந்து கிளம்பிச் சென்ற ஏர் இந்திய விமானம் ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட்டை சென்றடைந்தது. அங்கு 219 இந்தியர்களுடன் ருமேனியாவிலிருந்து மும்பைக்கு முதல் விமானம் புறப்பட்டுவிட்டது.

இதனை உறுதி செய்திருக்கும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், உக்ரைனிலிருக்கும் இந்தியர்களை மீட்க 24 மணி நேரமும் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை நான் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன் என்று சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.