கோவாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விகிதம் 10 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் கோவாவில் குவிந்தனர்.
கரோனாவின் மற்றோரு வகை தொற்றான ஒமைக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்கள் அதிக அளவில் கூடியதால் கரோனா பரவல் கோவாவில் அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன.2) மட்டும், கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விகிதம் 10.77 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை 338 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் கோவாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,671-ஆக அதிகரித்துள்ளது. 170 நாள்களுக்குப் பிறகு இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளது. இதனால் கோவாவில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,81,570-ஆக உயர்ந்துள்ளது.
ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அதிக அளவிலான மக்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் இருந்ததே இதற்கு காரணம் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


