சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கோவாவில் கூட்டமாக புத்தாண்டு கொண்டாடியதால் ஏற்பட்ட விளைவு?

கோவாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விகிதம் 10 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :3 ஜனவரி 2022, 11:17 am

DIN

கோவாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விகிதம் 10 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் கோவாவில் குவிந்தனர். 

கரோனாவின் மற்றோரு வகை தொற்றான ஒமைக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்கள் அதிக அளவில் கூடியதால் கரோனா பரவல் கோவாவில் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன.2) மட்டும், கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விகிதம் 10.77 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை 338 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் கோவாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,671-ஆக அதிகரித்துள்ளது. 170 நாள்களுக்குப் பிறகு இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளது. இதனால் கோவாவில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,81,570-ஆக உயர்ந்துள்ளது.

ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அதிக அளவிலான மக்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் இருந்ததே இதற்கு காரணம் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.