தில்லியில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், எய்ம்ஸ் மருத்துவர்களுக்கான குளிர்கால விடுமுறையை ரத்து செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒமைக்ரான் கரோனா வகை அச்சுறுத்தி வரும் நிலையில், தில்லி கரோனாவால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 6 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், எய்ம்ஸ் இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில்,
“ஒமைக்ரான் பெருந்தொற்று வேகமாக பரவி வருவதால், மருத்துவர்களுக்கு ஜனவரி 5 முதல் 10ஆம் தேதி வரை அளிக்கப்பட்ட குளிர்கால விடுமுறை ரத்து செய்யப்படுகிறது.
அனைத்து மருத்துவர்கள், பணியாளர்களும் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிடப்படுகிறது.”
இதையும் படிக்க | தில்லியில் சனி, ஞாயிறுகளில் முழுப் பொதுமுடக்கம்: துணை முதல்வர்
கரோனா பரவல் காரணமாக தில்லியில் வார இறுதி நாள்களில் பொதுமுடக்கம், இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.