ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

பிகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு கரோனா

பிகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டது.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:05 am

DIN


பிகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டது.

தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிதீஷ் குமார், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் தற்போது வீட்டில் தனிமையில் இருப்பதாக பிகார் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிகாரில் ஏற்கெனவே ஜனவரி 6 முதல் 21 வரை இரவுநேர கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. 1 முதல் 8 வரை நேரடி வகுப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இணைய வழி வகுப்புகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் 50 சதவிகித மாணவர்களைக் கொண்டு நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், மைதானங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், பூங்காக்கள் உள்ளிட்டவை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாடுகளும் ஜனவரி 21 வரை அமலில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.