

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 25 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 76,670 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 19,166 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 25 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க | கர்நாடக முதல்வருக்கு கரோனா
மேலும் 14,076 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 17 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
தடுப்பூசி:
கடந்த 24 மணி நேரத்தில் 25,030 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதுவரை மொத்தம் 2,75,22,072 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
மேலும், 15 முதல் 17 வயது வரையிலான சிறார்கள் 8,840 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதுவரை மொத்தம் 2,51,084 சிறார்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.