தில்லியில் 300 காவலர்களுக்கு கரோனா
தில்லியில் 300 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


தில்லியில் 300 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தலைநகர் தில்லியில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று வெளியிடப்பட்ட கரோனா தொற்று பாதிப்பு நிலவரப்படி, புதிதாக 22,751 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,49,730 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க- விருதுநகர்: மனைவியை கொலை செய்த கணவர்
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் தொற்றால் பலியாகியுள்ளனர். இதுவரை தில்லியில் கரோனாவால் 25160 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 60,733 பேர் தொற்று பாதிப்பிற்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தில்லியில் கூடுதல் ஆணையர் சின்மோய் பிஸ்வால் உள்பட 300 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை தில்லி காவல்துறை உறுதி படுத்தியுள்ளது. கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் தில்லியில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை என அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...