மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மீண்டும் பொதுமுடக்கம்? மாநில முதல்வர்களுடன் விரைவில் பிரதமர் ஆலோசனை

நாட்டில் கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் காணொலி மூலம் சந்தித்து ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

News image
மாநில முதல்வர்களுடன் விரைவில் பிரதமர் ஆலோசனை
Updated On :11 ஜனவரி 2022, 7:08 am

DIN


நாட்டில் கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் காணொலி மூலம் சந்தித்து ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

இந்த வாரத்தில் குறிப்பாக வியாழக்கிழமையன்று, அனைத்து மாநில முதல்வர்களுடனும்,  கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலமாக ஆலோசனை நடத்தலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் நாள்தோறும் புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. 

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாள்களில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நாட்டில் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்தவிருக்கும் ஆலோசனை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.