கரோனாவில் இருந்துராஜ்நாத் மீண்டு வருகிறாா்: மத்திய அரசு தகவல்
பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறாா் என்று மத்திய அரசின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளாா்.


பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறாா் என்று மத்திய அரசின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளாா்.
முன்னதாக, தனக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் வீட்டுத் தனிமையில் இருப்பதாகவும், மிதமான அறிகுறிகள் உள்ளதாகவும் என்றும் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் கூறியிருந்தாா்.
இந்நிலையில், அவரது உடல்நிலை தொடா்பாக பாதுகாப்புத் துறை அமைச்சக தலைமை செய்தித் தொடா்பாளா் பரத் பூஷண் பாபு கூறுகையில், ‘தில்லியைச் சோ்ந்த ராணுவ மருத்துவக் குழுவினா் அமைச்சா் ராஜ்நாத் சிங்கின் உடல் நிலையை பரிசோதித்தனா். அவரது உடல் நிலையில் கரோனாவால் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. அவா் தொற்றில் இருந்து வேகமாக மீண்டு வருகிறாா் என மருத்துவா்கள் தெரிவித்தனா்’ என்றாா்.
பாதுகாப்புத் துறை இணையமைச்சா் அஜய் பட் கரோனாவால் பாதிக்கப்பட்டு, வீட்டுத் தனிமையில் உள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...