தில்லியில் ஒரே நாளில் 21,259 பேருக்கு கரோனா; 23 பேர் பலி

தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 21,259 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு நாளில் மட்டும் 23 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். 
தில்லியில் ஒரே நாளில் 21,259 பேருக்கு கரோனா; 23 பேர் பலி
Updated on
1 min read

தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 21,259 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு நாளில் மட்டும் 23 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். 

தொற்றால் பாதிக்கப்படுவோர் விகிதம் 25.65 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு மே 5-ஆம் தேதி பதிவானதை விட அதிகமாகும்.

தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்களை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில் 82 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், புதிதாக 21,259 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 23 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

தில்லியில் 12,161 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். 2,161 பேர் மருத்துவமனைகளிலும், 50,796 பேர் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com