கோவா தேர்தலில் போட்டியிட காங்., திரிணமூலுடன் கூட்டணி பேச்சு: சரத் பவார்

கோவா தேர்தலில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவார்  (கோப்புப்படம்)
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவார் (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

கோவா தேர்தலில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 10 முதல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரங்களை அனைத்து கட்சிகளும் தொடங்கியுள்ளன.

கோவா பேரவையை பொறுத்தவரை ஆளும் பாரதிய ஜனதா, காங்கிரஸ், திரிணமூல், ஆம் ஆத்மி உள்ளிட்ட தேசிய கட்சிகளின் கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளனர்.

இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த சரத் பவார் கூறுகையில்,

“கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேசியவாத காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் திரிணமூல் மற்றும் காங்கிரஸுடன் ஈடுபட்டு வருகிறது.

மேலும், உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வகுப்புவாத பிரிவினை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு உ.பி. மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.

உத்தரப் பிரதேச மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். கண்டிப்பாக மாற்றத்தை பார்க்க முடியும்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com