பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-இல் தொடக்கம்: மக்களவைச் செயலகம்

பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி நிறைவடைவதாக மக்களவைச் செயலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

News image
Updated On :14 ஜனவரி 2022, 3:32 pm

DIN


பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி நிறைவடைவதாக மக்களவைச் செயலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நிகழாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனவரி 31-ம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இருஅவைகளையும் இணைத்து குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார். மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இரண்டு அமர்வுகளாக நடைபெறும் கூட்டத்தொடரானது பிப்ரவரி 11-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் மார்ச் 14-ம் தேதி கூடுகிறது.

கூட்டத்தொடரின் முதல் அமர்வின்போது 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் தீவிரத்தில் இருக்கும். இரண்டாவது அமர்வின்போது தேர்தல் முடிவுகள் வெளிவந்திருக்கும்.

முன்னதாக, நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. கடந்த 4-ம் தேதியிலிருந்து 8-ம் தேதிக்குள் நடத்தப்பட்ட பரிசோதனையில் மாநிலங்களவைச் செயலகத்தில் பணிபுரியும் 65 ஊழியர்கள், மக்களவைச் செயலகத்தில் பணிபுரியும் 200 ஊழியர்கள், மற்ற பிரிவுகளில் பணியாற்றும் 133 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.