பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-இல் தொடக்கம்: மக்களவைச் செயலகம்
பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி நிறைவடைவதாக மக்களவைச் செயலகம் செய்தி வெளியிட்டுள்ளது.


பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி நிறைவடைவதாக மக்களவைச் செயலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நிகழாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனவரி 31-ம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இருஅவைகளையும் இணைத்து குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார். மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இரண்டு அமர்வுகளாக நடைபெறும் கூட்டத்தொடரானது பிப்ரவரி 11-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் மார்ச் 14-ம் தேதி கூடுகிறது.
இதையும் படிக்க | குன்னூர் ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம்: விசாரணைக் குழு தகவல்
கூட்டத்தொடரின் முதல் அமர்வின்போது 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் தீவிரத்தில் இருக்கும். இரண்டாவது அமர்வின்போது தேர்தல் முடிவுகள் வெளிவந்திருக்கும்.
முன்னதாக, நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. கடந்த 4-ம் தேதியிலிருந்து 8-ம் தேதிக்குள் நடத்தப்பட்ட பரிசோதனையில் மாநிலங்களவைச் செயலகத்தில் பணிபுரியும் 65 ஊழியர்கள், மக்களவைச் செயலகத்தில் பணிபுரியும் 200 ஊழியர்கள், மற்ற பிரிவுகளில் பணியாற்றும் 133 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...