எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

தில்லியில் தற்போதைக்கு தளர்வுகள் இல்லை: சுகாதாரத்துறை அமைச்சர்

தில்லியில் தற்போதைக்கு கரோனா கட்டுப்பாடுகளிலிருந்து தளர்வுகள் அளிக்கப்படாது என சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

News image

தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் (கோப்புப்படம்)

Updated On :19 ஜனவரி 2022, 3:16 pm IST

தில்லியில் தற்போதைக்கு கரோனா கட்டுப்பாடுகளிலிருந்து தளர்வுகள் அளிக்கப்படாது என சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

தில்லியில் கரோனா மூன்றாம் அலை பரவியதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்துள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக 11,684 பேர் பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து சத்யேந்திர ஜெயின் கூறியதாவது:

தில்லியில் கரோனா உறுதியாகும் விகிதம் 30 சதவீதத்திலிருந்து 22.5 ஆக குறைந்துள்ளது. ஆனால், இது குறைவான பாதிப்பு இல்லை. கட்டுப்பாடுகள் தற்போதைக்கு தளர்த்தப்படாது.

மொத்தம் 13,000 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், மருத்துவமானையில் அனுமதி ஆகாததால் படுக்கைகள் தொடர்ந்து காலியாக உள்ளன. தில்லியில் தொடர்ந்து சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.