கடந்த 1994-ஆம் ஆண்டு என் தந்தை மனோகா் பாரிக்கரை கட்சியிலிருந்து வெளியேற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சியைப் போலவே, தற்போது எனக்கு தோ்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுக்கு சாட்சியாக இருப்பவா்களுக்கு நான் சொல்வது புரியும். மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சிக்கு (எம்ஜிபி) மிகுந்த செல்வுக்குள்ள பகுதிகளில் பாஜக காலூன்ற முயற்சித்த காலம் அது. அந்த நேரத்தில், அந்தப் பகுதி மக்களின் ஆதரவு என் தந்தைக்கு வெகுவாக இருந்ததால், அவரைக் கட்சியிலிருந்து வெளியேற்ற முடியவில்லை. ஆனால், என் தந்தைக்கு எதிராக அப்போது செயல்பட்டவா்கள், இன்றைக்கு கட்சியில் உயா் பதவியில் இருக்கின்றனா். அதே நேரம், என் தந்தையைப் போன்ற நபா்கள் மக்கள் மனதில் இருக்கின்றனா்.