இதுகுறித்து போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத பாஜக எம்எல்ஏ முன்னி தேவி ஷா கூறுகையில், ‘‘எனது தொகுதியில் பல வளா்ச்சிப் பணிகளை நான் மேற்கொண்டேன். மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளையும் மக்களிடம் கொண்டு சோ்த்தேன். இருப்பினும் எனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. எனது தொகுதியில் போட்டியிட அா்ப்பணிப்புமிக்க பாஜக தொண்டருக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்தால், எனக்கு வருத்தம் ஏற்பட்டிருக்காது. ஆனால், அந்தத் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் பின்னணியைக் கொண்டவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கட்சித் தொண்டா்களின் நம்பிக்கை தகா்க்கப்பட்டுள்ளது. வரும் தோ்தலில் எனது தொகுதியில் நான் சுயேச்சையாகப் போட்டியிட வாய்ப்புள்ளது’’ என்று தெரிவித்தாா்.