ஜம்மு-காஷ்மீரில் நள்ளிரவில் நடைபெற்ற இருவேறு துப்பாக்கிச் சூட்டில் லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுபற்றி காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
"புல்வாமா மற்றும் புட்காம் மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. தெற்கு காஷ்மீரின் புல்வாமாவிலுள்ள நைரா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மத்திய காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார்.
இதையும் படிக்க | இந்தியாவில் இன்னும் ஆபத்து நீங்கவில்லை: உலக சுகாதார அமைப்பு
புல்வாமாவில் கொல்லப்பட்ட 4 பயங்கரவாதிகள் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள். துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்திலிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொல்லப்பட்ட மற்றொரு பயங்கரவாதி லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்."
காஷ்மீர் ஐ.ஜி. விஜய் குமார் இதுபற்றி ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் ஸாகித் வானி உள்பட 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பது பாதுகாப்புப் படைகளின் பெரிய வெற்றி என்றார்.