/

காந்தி நினைவு நாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை

​மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாளையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் தில்லியில் மரியாதை செலுத்தினர்.

News image
Updated On :30 ஜனவரி 2022, 5:53 am

DIN


மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாளையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் தில்லியில் மரியாதை செலுத்தினர்.

நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தில்லி ராஜ்காட்டிலுள்ள காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி முன்னதாக காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை மெரீனா கடற்கரையில் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.