சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பாஜக தேசிய செயற்குழுவில் பங்கேற்க ஹைதராபாத் சென்றார் பிரதமர் மோடி

பாரதீய ஜனதா கட்சியின் இரண்டு நாள் தேசிய செயற்குழுவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை ஹைதராபாத் வந்தடைந்தார்.

News image
Updated On :2 ஜூலை 2022, 12:34 pm

DIN

ஹைதராபாத்: பாரதீய ஜனதா கட்சியின் இரண்டு நாள் தேசிய செயற்குழுவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை ஹைதராபாத் வந்தடைந்தார்.

பிரதமர் மோடி, நகரில் உள்ள பேகம்பேட் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, ஹெலிகாப்டர் மூலம் கூட்டம் நடைபெறும் ஹைதராபாத் சர்வதேச செயற்குழுவுக்கு புறப்பட்டார்.

பிரதமர் மோடி, தனது சுட்டுரையில், கட்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு விஷயங்கள் குறித்து பாஜக தேசிய செயற்குழுவில் விவாதிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தெலங்கனா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பிரதமரை வரவேற்றார். அவருக்கு தெலுங்கனா அரசு சார்பில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.ஸ்ரீனிவாஸ் யாதவ் உற்சாக வரவேற்பு அளித்தார்.

இந்த செயற்குழுவில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள், 18 மாநில முதல்வர்கள், பாஜகவின் மாநிலத் தலைவர்கள் மற்றும் பிற தலைவர்கள் உட்பட சுமார் 350 பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

இரண்டாம் நாள்(நாளை) தேசிய செயற்குழுவில் மோடி உரையாற்றுவார் என தெரிகிறது. தேசிய செயற்குழு முடிவடைந்த பின்னர், ஞாயிற்றுக்கிழமை மாலை செகந்திராபாத்தில் உள்ள பரேட் மைதானத்தில் கட்சி ஏற்பாடு செய்துள்ள பொதுக்கூட்டத்தில் அவர் மற்ற முக்கிய தலைவர்களுடன் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

பொதுக்கூட்டம் முடிந்து ராஜ்பவனில் தங்கும் மோடி, திங்கள்கிழமை காலை ஆந்திர மாநிலம் பீமாவரம் செல்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.